"உள்ளூர்காரர்களிடமே பணம் கேட்கிறாயா" திண்பண்டத்திற்கு காசு கொடுக்காமல் ஊழியர்களை குடிபோதையில் தாக்கிய கும்பல்....!!

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் பேக்கரியில் தின்பண்டங்கள் வாங்கி விட்டு, குடிபோதையில் பணம் தர மறுத்து ஊழியர்களை தாக்கிய மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

"உள்ளூர்காரர்களிடமே பணம் கேட்கிறாயா" திண்பண்டத்திற்கு காசு கொடுக்காமல் ஊழியர்களை குடிபோதையில் தாக்கிய கும்பல்....!!

திருப்பூர் மாவட்டம், அவிநாசி கைகாட்டிப்புதூரில் பேக்கரி செயல்பட்டு வருகிறது.  இந்த பேக்கரியில் வழக்கமாக டீ சாப்பிட வந்து செல்லும் மூன்று இளைஞர்கள் நேற்று இரவு வழக்கம் போல் பேக்கரிக்கு வந்து தின்பண்டங்கள் வாங்கியுள்ளனர்.  

அப்போது அவர்கள் குடிபோதையில் இருந்துள்ளனர். இதையடுத்து, வாங்கிய தின்பண்டங்களுக்கு பேக்கரி ஊழியர் பணம் கேட்டுள்ளார்.  அதற்கு, "உள்ளூர்காரர்களிடமே பணம் கேட்கிறாயா" என்று தகாத வார்த்தைகளால் திட்டியும் பேக்கரி பெயர் பலகையை கல்லால் தாக்கியும், பேக்கரி ஊழியர்களை கடுமையாக தாக்கிவிட்டு சென்றுள்ளனர்.  

இது குறித்து பேக்கரி மேலாளர் அவிநாசி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.  புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், அத்து மீறலில் ஈடுபட்ட ராயம்பாளையம் பகுதியை சேர்ந்த  கெளதமன்,   ப்ரவீன்ராஜ், மற்றும் ராஜ்குமார் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.