விரைவில் மதுரையில் மெட்ரோ பணி...நிர்வாக இயக்குனர் அறிவிப்பு!

விரைவில் மதுரையில் மெட்ரோ பணி...நிர்வாக இயக்குனர் அறிவிப்பு!

மதுரை மெட்ரோ ரயில்வே திட்டத்திற்கான கட்டுமானப் பணிகள் 2024ம் ஆண்டு இறுதியில் தொடங்கும் என மெட்ரோ நிர்வாக இயக்குனர் சித்திக் தெரிவித்துள்ளார். 

திருமங்கலம் - ஒத்தக்கடை இடையே 31 கிலோ மீட்டர் தொலைவில் 18 நிலையங்களுடன் மெட்ரோ ரயில் சேவையை செயல்படுத்துவதற்கான பணிகளை சென்னை மெட்ரோ ரயில்வே நிறுவனம் மேற்கொண்டிருக்கிறது.  இதற்கான விரிவான திட்ட அறிக்கையை ஆர்.வி.அசோசியேட்ஸ் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது.

இதையும் படிக்க : லாபம் ஈட்டும் நிறுவனங்களாக மாறிய டிட்கோ, சிப்காட்...அமைச்சர் பெருமிதம்!

இந்த திட்டத்துக்கு 8 ஆயிரத்து 500 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்த ஆலோசனை கூட்டம் மெட்ரோ நிர்வாக இயக்குனர் சித்திக் தலைமையில் நடைபெற்றது.  அப்போது பேசிய அவர், இந்த திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கை ஜூன் மாதத்திற்குள் அரசுக்கு அனுப்பப்படும் என்றார்.