மாணவியை கர்ப்பமாக்கிய கணித ஆசிரியர் கைது.!

மாணவியை கர்ப்பமாக்கிய கணித ஆசிரியர் கைது.!

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் வனத்துறை அலுவலகம் எதிரே டுட்டோரியல் காலேஜ் நடத்தி வந்தவர் கணித ஆசிரியர் லோகநாதன். 38 வயதான இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

இதற்கிடையில் லோகநாதனிடம் தனித் தேர்வு பயிற்சிக்கு வந்த 17 வயது மாணவியை அவர் பாலியல் பலாத்காரம் செய்து மூன்று மாதம் கர்ப்பமாக்கியுள்ளார். மேலும் இதனை வெளியே சொல்லக்கூடாது எனவும் மிரட்டியுள்ளார்.

இந்தநிலையில் மாணவியின் உடல்நிலை பாதிப்படையவே, மாணவியின் பெற்றோர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அவரை பரிசோதனை செய்த மாணவி 3 மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், மாணவியிடன் இது குறித்து கேட்டபோது தான் தெரியவந்தது, கணித ஆசிரியர் லோகநாதன் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது.

அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர்கள், இது தொடர்பாக மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் வழக்குபதிவு செய்து மாணவியை கர்ப்பமாக்கிய ஆசிரியரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.