காதலித்து ஏமாற்றிய நபருக்கு வேறு பெண்ணுடன் திருமணம்- தடுக்க முயன்ற காதலியால் பரபரப்பு

திருவாரூர் அருகே காதலித்து ஏமாற்றிய நபருக்கு வேறு பெண்ணுடன் நடைபெறவிருந்த திருமணத்தை காதலி தடுத்து நிறுத்த முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

காதலித்து ஏமாற்றிய நபருக்கு வேறு பெண்ணுடன் திருமணம்-  தடுக்க முயன்ற காதலியால் பரபரப்பு

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே நல்லிச்சேரியை சேர்ந்தவர் முருகையன். இவரது மகள் செல்வி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது திருவாரூர் மாவட்டம் செம்மங்குடியை சேர்ந்த செந்தில் முருகன் என்பவர் செல்வியை காதலித்தது  கல்யாணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி பழகி ஏமாற்றியுள்ளார்.

இதற்கிடையில் கடந்த சில ஆண்டுகளாக வெளிநாட்டில் வசித்து வந்த செந்தில்முருகன், தற்பொது சொந்த ஊர் திரும்பிய நிலையில் வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற உள்ளதாக கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று திருவாரூர் அருகே மணக்கால் அய்யம்பேட்டை பகுதியில் உள்ள தனியார் அரங்கில் செந்தில்முருகனுக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் இந்த திருமணத்தை காதலி செல்வி திருமண மண்டபத்திற்குள் நுழைந்து தடுத்து நிறுத்த முயன்றார். அப்போது போலீசார் செல்வியை தடுத்து நிறுத்தினர்.

இதனிடையே திருமண விழாவில் பங்கேற்ற உறவினர்களுக்கும் செல்விக்கும் தகராறு ஏற்பட்டது.    அதனைத் தொடர்ந்து போலீசார் செல்வியை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பான சூழ்நிலை நிலவியது .