கடலில் தவறி விழுந்த மீனவர் மாயம்...  தேடும் பணி தீவிரம்....

நாகையில் கடலில் தவறி விழுந்த மீனவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கடலில் தவறி விழுந்த மீனவர் மாயம்...  தேடும் பணி தீவிரம்....

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறையை சேர்ந்த சாமிநாதன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் இன்று மாலை 3 மணி அளவில் ஆறுகாட்டுத்துறை கடற்கரையிலிருந்து மீன்பிடிக்கச்  கேசவன்,திருமால், பழனி ஆகிய மூவரும் ஆறுகாட்டுத்துறைக்கு கிழக்கே சுமார் இரண்டு நாட்டிகல் மைல் தூரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது  கற்றின் வேகத்தால் மீனவர் பழனி (வயது 38) படகிலிருந்து தவறி விழுந்துவிட்டார். படகில் இருந்த மற்ற மீனவர்கள் அவரை தேடியும் கிடைக்கவில்லை உடனடியாக ஆறுகாட்டுத்துறை மீனவர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு அங்கிருந்து சக மீனவர்கள் படகு மூலம் கடலில் மீனவரை தேடி வருகின்றனர்.

இது குறித்து மீனவ பஞ்சாயத்தார் வேதாரண்யம் கடலோர காவல் குழுமத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.