திடீரென முடங்கியது,.. பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் இணைய சேவை..!

திடீரென முடங்கியது,.. பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் இணைய சேவை..!

பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் இணைய சேவையானது திடீரென முடங்கியுள்ளது....

பெருவாரியான மக்கள் உபயோகப்படுத்தி வரும் வங்கியான பேங்க் ஆஃப் இந்தியாவில் திடீரென கடந்த நான்கு மணி நேரங்களாகவே இனைய சேவையானது முடங்கிவிட்டது. இதனால் பல வாடிக்கையாளர்கள் அவதியுறுகின்றனர். இதனால் போன் பே, கூகிள் பே , என எந்த வித பணபரிவர்த்தனையும் செய்யமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அதோடு, வங்கியின் இணையசேவை முற்றிலுமாக முடக்கப்பட்டு அதற்கான துரித நடவடிக்கை இன்னும் எடுக்கப்படவில்லை எனவும், இதனால் தங்களின் அத்தியாவசிய அவசர தேவைகளுக்கு கூட பணப்பரிவர்த்தனை செய்யமுடியாத அவல  நிலை தங்களுக்கு வந்துள்ளதாக வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். 

இன்னும் இந்த அசௌகரியங்களை கண்டறிந்து உடனடியாக சேவையை மீட்டு உடனே பயன்பாட்டிற்கு எதுவாக சீரமைக்கும் படியும் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த திடீர் சேவை முடக்கத்தால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். 

தங்களின் வங்கிக் கணக்குகள் சரிவர இயங்காததை குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுக்கொண்டு வருகின்றனர். 

இதையும் படிக்க    } மெட்ரோ பயணிகளுக்கு ஒரு நற்செய்தி..! வாட்ஸ் ஆப் -ல் செயலி மூலம் டிக்கெட் பெரும் புதிய வசதி அறிமுகம்..!