கடன் கேட்டு தகராறு.. பெண்ணுக்கு அருவாள் வெட்டு..கடலூரில் பரபரப்பு!!

கணவனை இழந்த பெண்ணை அக்கா கணவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடன் கேட்டு தகராறு.. பெண்ணுக்கு அருவாள் வெட்டு..கடலூரில் பரபரப்பு!!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த நாவலூர் கிராமத்தை சேர்ந்தவர் காவேரி. இவரது கணவர் உடல் நலம் குறைவு காரணமாக கடந்த 5 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், தனது இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

கடன் வாங்கிய காவேரி கணவர்:

காவேரியின் கணவர் முருகன் உயிருடன் இருக்கும் போது அவரின் அக்கா குடும்பத்தினரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த கடன் தொடர்பாக முருகனுக்கும் முருகனின் அக்கா குடும்பத்திற்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

அரிவாள் வெட்டு வாங்கிய காவேரி:

இந்நிலையில், இன்று காவேரி வீட்டுக்கு சென்ற முருகனின் அக்கா கணவருக்கும், காவேரிக்கும் கடன் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த முருகனின் அக்கா கணவர் அருகில் இருந்த அருவாமனையை எடுத்து காவேரியை ஆவேசமாக வெட்டியுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதி:

இதை கண்ட அப்பகுதி மக்கள் அவரை தடுக்க முயன்றனர். ஆனான் முருகனின் அக்கா கணவர் தடுக்க வருபவர்களையும் வெட்ட முயன்றுள்ளார். இந்த சம்பவதில் பலத்த காயம் அடைந்த காவேரியை அங்கிருந்தவர்கள் திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆவினங்குடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.