சொத்து பிரச்னையில் மகனை வெட்டிக் கொன்ற தந்தை...!

தூத்துக்குடி அருகே மகனை, தந்தை வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சொத்து பிரச்னையில் மகனை வெட்டிக் கொன்ற தந்தை...!

கவர்னகிரி பகுதியைச் சேர்ந்த தமிழழகனுக்கும், அவரது மகன் காசிராஜனுக்கும் சொத்து பிரச்சனை இருந்ததாக தெரிகிறது. இதுகுறித்த வழக்கு தூத்துக்குடி நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

அதில் இருவரும் ஆஜரான நிலையில், தந்தை தமிழழகனை மகன் காசிராஜன் வெட்ட முயன்றுள்ளார். அப்போது அதே அரிவாளைப் பறித்து காசிராஜனைத் தமிழழகன் வெட்டினார். தடுக்க வந்த இருவருக்கும் சரமாரியாக அரிவாள் வெட்டு விழுந்தன.

இதில் காசிராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நீதிமன்றத்திற்கு எதிரே நிகழ்ந்த அரிவாள் வெட்டு சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.