பாதிப்பு வெறும் 58... 4-வது நாளாக உயிரிழப்புகள் இல்லை.. சுகாதாரத்துறை வெளியிட்ட முழு விவரம்!!

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு  58 ஆக பதிவாகி உள்ளதென குறிப்பிட்டுள்ள சுகாதாரத்துறை, தொடர்ந்து நான்காவது நாளாக உயிரிழப்புகள் ஏற்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

பாதிப்பு வெறும் 58... 4-வது நாளாக உயிரிழப்புகள் இல்லை.. சுகாதாரத்துறை வெளியிட்ட முழு விவரம்!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக  குறைந்துள்ள நிலையில், தற்போதைய நிலவரம் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் நேற்று 58 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 24 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 52 ஆயிரத்து 334 ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம் நேற்று ஒரே நாளில் 118 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 13 ஆயிரத்து 639 ஆக உயர்ந்துள்ளது. நேற்றும் கொரோனா தொற்றால் யாரும் உயிரிழக்கவில்லை. இதையடுத்து, கொரோனாவால் தமிழகத்தில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 38 ஆயிரத்து 25 ஆக நீடித்து வருகிறது. மாநிலம் முழுவதும் 670 பேர் சிகிச்சையில் உள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.