கள்ளக்காதலியுடன் கணவன் ஓட்டம்...நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரகத்தில் மனைவி புகார்....!

சேலத்தில் மனைவி மற்றும் மகன்களை தவிக்கவிட்டு கள்ளக்காதலியுடன் ஓட்டம் பிடித்த கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளித்துள்ளார். 

கள்ளக்காதலியுடன் கணவன் ஓட்டம்...நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரகத்தில் மனைவி புகார்....!

சேலம் பொன்னம்மாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ரமேஷ்சிங் என்பவரும், சென்னையை சேர்ந்த மோகனப்பிரியா என்பவரும் கடந்த 2008-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு 13 மற்றும் 6 வயதில் 2 மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் குகை பகுதியில் உள்ள தனியார் நகைகடையில் மேலாளராக பணிபுரிந்து வந்த ரமேஷ்சிங் அதே கடையில் பணியாற்றிய சத்யா என்ற பெண்ணை காதலித்து கடந்த நவம்பர் 18 ஆம் தேதி சட்ட விரோதமாக இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த மோகனப்பிரியா அளித்த புகாரின் பெயரில் அம்மாபேட்டை அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் சத்யாவை காப்பகத்திற்கு அனுப்பி வைத்து ரமேஷ் சிங்கை முதல் மனைவியுடன் சேர்ந்து வாழுமாறு அறிவுரை கூறி அனுப்பி வைத்துள்ளனர்.

ஆனால் கடந்த 4 நாட்களுக்கு முன்பு காப்பகத்தில் இருந்து வெளியே வந்த சத்யா உடன் ரமேஷ் சிங் மீண்டும் ஓட்டம் பிடித்துள்ளார்.  இதையடுத்து மனைவி மற்றும் மகன்களை தவிக்க விட்டு கள்ளக்காதலியுடன் ஓட்டம் பிடித்த கணவர் மற்றும் அவருக்கு உடந்தையாக உள்ள அவரது குடும்பத்தார், நகைக்கடை உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட பெண் மகன்களுடன் சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.