500 ரூபாயை எடுத்ததாக கூறி மனைவியை கொடூரமாக வெட்டி கொன்ற கணவன்....

திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரன்பட்டினத்தில் 500 ரூபாயை எடுத்தாக கூறி மனைவியை, கணவன் கொடூரமாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

500 ரூபாயை எடுத்ததாக கூறி மனைவியை கொடூரமாக வெட்டி கொன்ற கணவன்....

திருச்செந்தூர் அருகேயுள்ள குலசேகரன்பட்டினம் கருங்காளி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சுடலை. இவருக்கு திருமணமாகி முத்தம்மாள் என்ற மனைவியும் 3 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். மூன்று மகள்களுக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இதற்கிடையில் சுடலையும், முத்தம்மாளும் கருத்துவேறுபாடு காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக பிரிந்து ஓரே காம்பவுண்டில் அடுத்தடுத்த தனித்தனி வீடுகளில் வசித்து வந்தனர்.

முத்தம்மாள் அவரது மகன் மற்றும் மருமகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் இன்று காலை வீட்டில் முத்தம்மாள்  மட்டும் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த சுடலை, முத்தம்மாளிடம் 500 ரூபாய் பணத்தை எடுத்ததாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

வாக்குவாதம் முற்றிய நிலையில் சுடலை தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால், முத்தம்மாளின் இடது கை, கால் மார்பு, தலை ஆகிய இடங்களில் சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த முத்தம்மாள் சம்பவ இடத்திலேயே பலியானார்.

பிறகு வீட்டிற்கு வந்த முத்தமாளின் மகள் மற்றும் மருமகன், உறவினர்கள் ஆகியோர் இறந்தவர் உடலை பார்த்து கதறி அழுத காட்சி காண்போரை கலங்க வைத்தது. பின்னர் தகவலறிந்து வந்த போலீசார் சுடலையை கைது செய்து காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.