மோட்டார் சைக்கிளை வழிமறித்து வாலிபரிடம் பணம் பறித்த கும்பல்....இருவர் கைது...!!

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே மோட்டார் சைக்கிளை வழி மறித்து வாலிபரிடம் பணம் பறித்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

மோட்டார் சைக்கிளை வழிமறித்து வாலிபரிடம் பணம் பறித்த கும்பல்....இருவர் கைது...!!

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே கண்ணன்பதியை சேர்ந்த துரைமுருகன் என்பவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். நேற்று தனது மோட்டார் சைக்கிளில் நாகர்கோவில் புறப்பட்டார்.

அப்போது தேரூர் குளக்கரை பாதையில் வந்த போது மூன்று பேர் கொண்ட கும்பல் மோட்டார் சைக்கிளை வழி மறித்து தகாதவார்த்தையால் திட்டியுள்ளனர்.

ஒரு கட்டத்தில் துரைமுருகனின் சட்டை பாக்கெட்டிலிருந்து ரூபாய் 500 ஐ பறித்துவிட்டு துரை முருகனுக்கு கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர் அந்த கும்பல், இதுகுறித்து துரைமுருகன் சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்ததில் புதுக்குடியிருப்பை சேர்ந்த விஜய், ஒழுகினசேரியை சேர்ந்த வினோத்குமார் மேலும் மற்றோரு விஜய் என்பது தெரிய வந்தது

இதில் இரண்டு பேரை கைது செய்த போலீசார் தலைமறைவாக உள்ள விஜய் என்பரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அந்தபகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.