தனியார் பள்ளி வாகனத்தின் கதவு உடைந்து விபத்து..!

தாம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனத்தில் அவசர வழி கதவு உடைந்து விபத்து...

தனியார் பள்ளி வாகனத்தின் கதவு உடைந்து விபத்து..!

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த முடிச்சூர் சாலையில் இயங்கி வரும் ஒரு தனியார் பள்ளியில் 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இன்று வழக்கம் போல் பள்ளி வாகனம் பழைய பெருங்களத்தூர் அருகே காந்தி சாலையில் உள்ள மாணவர்களை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது.

அப்போது  எதிர்பாராத விதமாக வாகனத்தின் அவசர வழி கதவு உடைந்து உள்ளிருந்த ரியானா (7) என்ற மாணவி  கீழே  விழுந்ததில் 7 பற்கள் உடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதை பாரத்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பள்ளி வாகனத்தை முற்றுக்கையிட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.