அணை நிரம்பி ஊருக்கும் புகுந்த தண்ணீர்... பொதுமக்கள் அவதி

கள்ளகுறிச்சி அருகே அணை நிரம்பி ஊருக்குள் புகுந்த தண்ணீரானது, வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

அணை நிரம்பி ஊருக்கும் புகுந்த தண்ணீர்... பொதுமக்கள் அவதி

கள்ளக்குறிச்சி அருகே உள்ள தென்கீரனூர் கிராமத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அந்தபகுதியில் நேற்று இரவு பெய்த கன மழையில் கீரனூர் ஏரி நிரம்பி ஊருக்குள் தண்ணீர் புகுந்தது.

இதனால் ஏரி கரையோரம் இருந்த, வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். அதன்பின்பு தகவலறிந்து வந்த வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.

மேலும் நீர்நிலைகளில் பொதுமக்கள் இறங்கவோ ஆடு மாடுகளை குளிப்பாட்டவோ கூடாது என்ற எச்சரிக்கை அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு மழை பெய்யக்கூடும் என்பதால் கிராமம் முழுவதும் தண்ணீர் புகுந்துவிடும் என்ற அச்ச நிலை நிலவுகிறது. இதனால் வருவாய் துறையினர் மற்றும் காவல்துறையினர் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச்செல்ல தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.