அதிமுக தொண்டர்கள் யார் பக்கம்...திருச்சி மாநாட்டின் மூலம் நிரூபணமாகும் - பண்ரூட்டி ராமசந்திரன்!

அதிமுக தொண்டர்கள் யார் பக்கம்...திருச்சி மாநாட்டின் மூலம் நிரூபணமாகும் - பண்ரூட்டி ராமசந்திரன்!

அதிமுக தொண்டர்கள் யார் பக்கம் என்பதை  ஏப்ரல் 24 ம் தேதி திருச்சியில் நடைபெறவுள்ள  மாநாட்டின் மூலம் நிரூபணமாகும் என பண்ரூட்டி ராமசந்திரன் பேட்டியளித்துள்ளார். 

சென்னை பசுமைவழிச்சாலையில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் ஆதரவாளர் பண்ருட்டி ராமசந்திரன், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் எடுத்த முடிவு எங்களுக்கு தன்னம்பிக்கையை தந்துள்ளதாக கூறினார். ஈரோடு கிழக்கு தேர்தல் பிரச்சாரத்தின் போது எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களை பயன்படுத்தியும் மக்கள் அவர்களை ஏற்காதது நாடாளுமன்ற தேர்தலில் உள்ள மாயை விலகிவிடும் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க : குரூப் 4 தேர்வில் முறைகேடா? தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் விளக்கம்!

தொடர்ந்து பேசிய அவர், எம்ஜிஆர் , ஜெயலலிதா பிறந்தநாள் மற்றும் அதிமுக பொன்விழா ஆண்டு என வருகின்ற ஏப்ரல் 24 ஆம் தேதி திருச்சியில் மாபெரும் முப்பெரும் விழா மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டின் மூலம் அதிமுக தொண்டர்கள் யார் பக்கம் என்பது நிரூபணமாகும் என்றும், இனி எடப்பாடி பழனிசாமி அணி குறித்து நாங்கள் விமர்சிக்கவோ, பேசவோ மாட்டோம் என தெரிவித்தார்.