காவல் நிலையத்தில் இருந்து வெளியில் வரும் வீடியோவை சினிமா பாணியில் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட சிறுவர்கள் !!

பொள்ளாச்சியில் காவல் நிலையத்தில் இருந்து வெளியில் வரும் வீடியோவை சினிமா பாணியில் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்திய இரண்டு சிறுவர்களை அறிவுறுத்தி மன்னிப்பு வழங்கிய போலீசார்.

காவல் நிலையத்தில் இருந்து வெளியில் வரும் வீடியோவை சினிமா பாணியில் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட சிறுவர்கள் !!

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் இருந்து வெளியே வரும் இரண்டு சிறுவர்கள், நீங்க இங்க எப்படியோ எங்க ஊர்ல நாங்க, தெரியலனா இரண்டு பேருகிட்ட கேட்டு தெரிஞ்சுக்கோங்க என்ற சினிமா பட வசனத்துடன் வீடியோ எடுத்து  இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தில் பதிவிட்டனர். இந்த வீடியோ வைரலானதை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் சிறுவர்கள் எந்த பகுதியை சேர்ந்தவர் என்று விசாரித்து வந்தனர்.

பின்னர் இவர்கள் இருவரும் கோட்டூர் ரோட்டை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதனை அடுத்து கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர்  ராமதாஸ் மற்றும் உதவி ஆய்வாளர் திருமலைசாமி இருவரும் சிறுவர்கள்  வீட்டுக்கு நேரில் சென்று படிக்கும் வயதில் இது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்று பெற்றோர்கள் முன்னிலையில்  அறிவுரை வழங்கி விட்டு வந்தனர். மேலும் இருவரும் இதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபட மாட்டோம் சமுதாயத்தில் நல்ல பெயர் எடுக்கும் வகையில் நடந்து கொள்வோம் என்று மன்னிப்பு கேட்டு அந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர்.