பல்கலைக்கழக துணை வேந்தர்களுடன் ஆளுநர் இன்று ஆலோசனை...

புதிய கல்வி கொள்கை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து, அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள் உடன் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

பல்கலைக்கழக துணை வேந்தர்களுடன் ஆளுநர் இன்று ஆலோசனை...

தமிழக ஆளுநராக சமீபத்தில் பொறுப்பேற்றுள்ள ஆர்.என்.ரவி, படிப்படியாக தம நிர்வாக பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார். பல்கலைக்கழகங்களின் வேந்தராகவும் அவர் இருப்பதால், உயர்கல்வி நிறுவனங்களின் செயலாளர்கள் மற்றும் அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள் உடன், ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.  

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் காலை 10:30 மணிக்கு நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில், உயர் கல்வித்துறையின் கீழ் வரக்கூடிய சட்டம், வேளாண்மை, கால்நடை, மருத்துவம், மீன்வளத் துறை உள்பட பல்வேறு துறைகளின் செயலாளர்கள் பங்கேற்க உள்ளனர். மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவது, யு.ஜி.சி.யின் உத்தரவுகளை பின்பற்றுவது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.