பொருநை அருங்காட்சியகம்...இன்று அடிக்கல் நாட்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

பொருநை அருங்காட்சியகம்...இன்று அடிக்கல் நாட்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

நெல்லையில் அமையவுள்ள பொருநை அருங்காட்சியக கட்டுமான பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டுகிறார். 

தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் ஆதிச்சநல்லூா், சிவகளை, கொற்கை உள்ளிட்ட இடங்களில் மேற்கொண்ட அகழ்வாய்வில் கிடைத்த பொருட்களைக் காட்சிப்படுத்துவதற்காக, நெல்லையில் பொருநை அருங்காட்சியம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. 

இதையும் படிக்க : கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சர் இவர்தான்... அதிகாரப்பூர்வமாக அறிவித்தது காங்கிரஸ் தலைமை...!

இந்நிலையில், 33 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பில் பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்படவுள்ளது. அதன் கட்டுமான பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டவுள்ளார்.