காமெடியாக பேசும் கர்நாடக முதல்வர்: பி.ஆர்.பாண்டியன் சாடல்

காவிரி விவகாரத்தில் கர்நாடக முதலமைச்சர் முன்னுக்கு பின் முரணாக பேசுவது நகைச்சுவையாக உள்ளது  என தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

காமெடியாக பேசும் கர்நாடக முதல்வர்:  பி.ஆர்.பாண்டியன் சாடல்

காவிரி விவகாரத்தில் கர்நாடக முதலமைச்சர் முன்னுக்கு பின் முரணாக பேசுவது நகைச்சுவையாக உள்ளது  என தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகனை அவரது இல்லத்தில் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு தலைவர் பி.ஆர்.பாண்டியன் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்திக்கையில், காவிரி குறித்த தமிழக அரசின் அணுகுமுறை எப்படி அமைய வேண்டும் என்கிற 8 பக்கம் உள்ள ஒரு விரிவான கடிதத்தை நான் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் கொடுத்தேன். முழுவதும் படித்து பார்த்து அத்தனை கருத்துகளை வரவேற்கத்தக்கது. இது ஆட்சிக்கு மிகுந்த உதவிகரமாக இருக்கும் என்றார். காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு நிரந்தர தலைவரை உடனடியாக நியமனம் செய்வதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், காவிரி கண்காணிப்புக் குழு அலுவலகம் கர்நாடகா மாநிலம் பெங்களூர் நகரத்தில் ஏற்படுத்த வேண்டும் என்றேன். அதேபோல் ராசிமணல் அருகே அணை கட்ட வேண்டும் என்ற கருத்தையும் நான் சொல்லியிருக்கிறேன் விரைந்து செயல்படுவதற்கு அனைத்து நடவடிக்கை மேற்கொள்வேன் என்று ஒத்துக்கொள்கிறார்கள் மிகுந்த நம்பிக்கையோடு இந்த சந்திப்பு நடைபெற்றது என்றார்.

மேலும் காவிரி ஆற்றில் மாதாந்தர நீர் வழங்குவது குறித்து மத்திய ஜல் சக்தி துறை அமைச்சருக்கு தமிழக முதலமைச்சர் கடிதம் எழுதுவது மரபு என்ற அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது அதை வரவேற்கிறேன், ஆனால் தமிழக முதலமைச்சர் டெல்லி செல்லும் போது காவிரி மேலாண்மை ஆணைய தலைவரை சந்திக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளேன். படுக்கை அணை என்ற பெயரில் கர்நாடக அரசு வரம்பு மீறிய செயல்படுகிறது. மார்க்கண்டேய நதியில் தடுப்பு அணை கட்டிய கர்நாடகா அரசை கண்டத்து நாளை 10 மணியளவில் கிருஷ்ணகிரியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார்.

மேலும், உச்சநீதிமன்ற நீதிமன்றம் 2013 மிகத் தெளிவாகச் சொல்லி இருக்கிறது இனி காவிரி பிரச்சனையில் தமிழகம், கர்நாடகம் அரசுக்கு இடையே முதலமைச்சர்கள் அடிப்படையான பேச்சுவார்த்தைக்கு இனி இடமில்லை கூறியுள்ளது. ஆனால் கர்நாடகா முதலமைச்சர் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளது நகைச்சுவையாக உள்ளது எனவும் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.