தீயைணைப்புத்துறைக்கு பணியிட மாற்றம், பணி நியமன ஆணையை வழங்கினார் முதலமைச்சர்.

தீயைணைப்புத்துறைக்கு பணியிட மாற்றம், பணி நியமன ஆணையை   வழங்கினார் முதலமைச்சர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை  பணி நியமன ஆணைகளையும், பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார்.

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் மாநில முழுவதும் நடைபெற்ற திருக்குறள் முற்றோதல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, தலா 15 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகையும், பாராட்டு சான்றிதழ்களை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் சாமிநாதன், தலைமைச் செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

இதேபோன்று,  தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் தீயணைப்பு அலுவலர் பணியிடம் மற்றும் தீயணைப்போர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். 
 
இதனைத் தொடர்ந்து, புதுடில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் Eat Right Challenge போட்டியில் சிறந்த செயல்பாட்டிற்கான விருதுகள், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டன. இந்த விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் காண்பித்து, வாழ்த்து பெற்றனர். 

இதையும் படிக்க    | அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் தேதி அறிவிப்பு..!