கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படுமா..? முதலமைச்சர் இன்று ஆலோசனை...

தொற்று பரவல் காரணமாக கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படுமா?

கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படுமா..? முதலமைச்சர் இன்று ஆலோசனை...

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், ஊரடங்கை நீட்டிக்கலாமா? புதிய கட்டுப்பாடுகளை விதிக்கலாமா என்பது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், இன்று காலை 11 மணியளவில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில், புதிய கட்டுப்பாடு விதிப்பது குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், ஜனவரி மூன்றாம் தேதியில் இருந்து முதல் 6 –லிருந்து 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சி முறையில்லாமல் வகுப்புகள் நடத்தலாம் என அறிவிக்கப்பட்டியிருந்து. சுழற்சி முறையில் இல்லாமல் வகுப்புகள் நடத்தலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதுகுறித்து நிபுணர்களுடன் ஆலோசிக்க வாய்ப்பு இருப்பதாகவும் உள்ளது.

ஒமிக்ரான் வகை கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், மீண்டும் ஒருநாள் விட்டு ஒரு நாள் வகுப்புகள் நடத்தலாமா என்றும் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தலாமா எனவும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.