கஜா புயலால் சேதமடைந்த பள்ளி...சீரமைத்த சகோதரர்கள்...வாழ்த்திய முதலமைச்சர்!
திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தான் கிராமத்தில், கஜா புயலினால் சேதமடைந்த அரசுப் பள்ளியை சீரமைத்த சகோதரா்களுக்கு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளை தொிவித்துள்ளாா்.
கஜா புயலினால் சேதமடைந்த பள்ளியை சீரமைத்த சகோதரர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக் கூறி தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார்.
இதையும் படிக்க : சுட்டெரிக்கும் வெயிலை தணித்த சூரைக்காற்று மழை...மகிழ்ச்சியில் பொதுமக்கள்!
இதுகுறித்து அவரது ட்விட்டா் பதிவில், திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தான் கிராமத்தில், கஜா புயலினால் சேதமடைந்த 60 ஆண்டுகால அரசுப்பள்ளியை அப்பகுதியை சோ்ந்த சகோதரர்கள் சீரமைத்துள்ளதை அறிந்து முதலமைச்சராக மட்டுமல்ல, திருவாரூர்க்காரனாகவும் உள்ளம் நெகிழ்ந்து போனதாக குறிப்பிட்டுள்ளாா். மேலும் அவா்கள் அந்த ஊரின் பெயர்போல் பெருகவாழ்வார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளாா்.
திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தான் கிராமத்தில், #CycloneGaja-வினால் சேதமடைந்த 60 ஆண்டுகால அரசுப் பள்ளியை, அந்தக் கிராமத்தில் வசித்த தாய் தனசேகரி அவர்களின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு, சிங்கப்பூர் வாழ் சகோதரர்களான இளங்கோவன், முத்தழகன், இராஜகோபால் ஆகியோர் #நம்ம_பள்ளி திட்டத்தின்படி…
— M.K.Stalin (@mkstalin) June 11, 2023