போகியன்று பிளாஸ்டிக், டயர்களை எரித்தால் ரூபாய் 1000 அபராதம்...மாநகராட்சியின் அதிரடி உத்தரவு

போகி அன்று பிளாஸ்டிக் எரித்தால் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

போகியன்று பிளாஸ்டிக், டயர்களை எரித்தால் ரூபாய் 1000 அபராதம்...மாநகராட்சியின் அதிரடி உத்தரவு

பொங்கல் திருநாளாம் தைத்திருநாள், பொங்கலுக்கு முந்தைய நாளான போகிப் பண்டிகைக்கு ஒவ்வொரு ஆண்டும், பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதை பறைசாற்றும் வகையில், வீட்டில் பயன்படுத்தி, தூக்கி எறியும் பொருட்களை தீயிட்டுக் கொளுத்தி, அதனைக் கொண்டாடுவது தான் வழக்கம்.

இருப்பினும் ஒரு சில கிராமங்களில், எல்லோரும் ஒரேயிடத்தில் ஒன்றுக்கூடி அனைத்துப் பொருள்களையும் தீயிட்டுக் கொளுத்தி, அதனை சுற்றி ஆடியும், பாடியும், மேளமடித்தும் உற்சாகத்தை வெளிப்படுத்துவார்கள்.

ஆனால், தற்போதிருக்கும் சுற்றுச்சூழல் பிரச்சனையில், போகிப் பண்டிகையன்று பழைய பொருள்களைக் எரிக்க வேண்டாம் என்று பல்வேறு தரப்பிலும் வேண்டுகோள் வைக்கப்படுகிறது.

இந்நிலையில், இவர்களின் வேண்டுகோளை கருத்தில் கொண்டு சென்னையில் போகிப்பண்டிகையையொட்டி விதிகளை மீறி பிளாஸ்டிக், நெகிழி, டயர்களை எரித்தால் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும் அனைத்து மண்டலங்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.