பா.ஜ.க என்பது காற்றடைத்த பலூன் எப்போது வேண்டுமானலும் வெடிக்கும்...கே.எஸ்.அழகிரி விமர்ச்சனம்....!

பா.ஜ.க என்பது காற்றடைத்த பலூன் எப்போது வேண்டுமானலும் வெடிக்கும்  என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்

பா.ஜ.க என்பது காற்றடைத்த பலூன் எப்போது வேண்டுமானலும் வெடிக்கும்...கே.எஸ்.அழகிரி விமர்ச்சனம்....!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறுகையில்,

 

ராகுல் காந்தி இந்தியாவிற்கு எடுத்துக்காட்டாண தலைவர் என்றும் மோடி விவசாயிகள் சட்டம் கொண்டு வந்தபோது, மதுரை வந்த ராகுல் காந்தி இன்னும் 1 வருடத்தில் இந்த மோடி அரசாங்கம் இதனை திரும்ப பெரும் என்று கூறினார் அது போலவே நடந்தது.  மோடி ஆட்சியில் இந்திய பொருளாதாரம், கலாச்சாரம் சீரழிந்துள்ளது. இதனை சரி செய்யும் ஆற்றல்   ராகுல் காந்தியிடன் தான் உள்ளது என்றார்.

தமிழகத்தில் தற்போது விடியல் ஏற்பட்டுள்ளது. தவறு நடக்கும் இடத்திற்கு முதல்வர் செல்கிறார், தவறானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது,சொந்த கட்சி காரர்கள் தவறு செய்தால் கூட கண்டிக்கப்படுகிறார்கள். இதனை காங்கிரஸ் கட்சி வரவேற்பதாக கூறினார்.  

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதற்கு மீண்டும் அடைப்பு என்பது தேவை இல்லாத ஒன்று என்றும்  பொதுமக்கள் முக கவசம் அணிவது  தடுப்பூசி செலுத்துவது போன்றவற்றை  கடைபிடிக்க வேண்டும் என்றார்.

மேலும் பாஜக ஆளும்  கர்நாடகாவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது போல இனி நாட்டில்  இருந்து பாஜக அகற்றப்படும் என தெரிவித்தார்.