17-ம் கட்டமாக இன்று மெகா தடுப்பூசி முகாம்... 2 தவணைகளையும் விரைவாக செலுத்த அறிவுரை...

தமிழகம் முழுவதும் 17-வது கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம், 50 ஆயிரம் இடங்களில் இன்று நடைபெறுகிறது.

17-ம் கட்டமாக இன்று மெகா தடுப்பூசி முகாம்... 2 தவணைகளையும் விரைவாக செலுத்த அறிவுரை...

புதிதாக உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் தொற்று உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இந்தியாவிலும் ஆயிரத்து 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால், தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 16 கட்டமாக மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. வீடுகளுக்கு சென்றும் தடுப்பூசி போடப்படுகிறது. இதுவரை 87 சதவீதத்தினருக்கு முதல் தவணையும், 57 சதவீதத்தினருக்கு 2 தவணைகளும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், 17-வது மெகாதடுப்பூசி முகாம் இன்று தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் நடக்க உள்ளது. சென்னையில் மட்டும் ஆயிரத்து 600 இடங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

மெகா தடுப்பூசி முகாம் வாரம்தோறும் சனிக்கிழமை நடந்து வருகிறது. இந்த வாரம் சனிக்கிழமை புத்தாண்டு என்பதால் முகாம் ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றப்பட்டது.  அடுத்த வாரம் முதல் வழக்கம்போல், சனிக்கிழமையில் முகாம் நடத்தப்படும். ஒமிக்ரான் தொற்று பரவல் அதிகரித்து வருவதால் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகளை பொதுமக்கள் விரைவாக செலுத்திக் கொள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.