தஞ்சை : முதலமைச்சர் வரும்வழியில் நடந்த சம்பவத்தால் பரபரப்பு..!

தஞ்சை :  முதலமைச்சர் வரும்வழியில் நடந்த சம்பவத்தால் பரபரப்பு..!

தஞ்சாவூரில் தமிழ்நாடு முதலமைச்சர் வாகனம் வருவதற்கு சில நிமிடங்கள் இருக்கும் நிலையில், அந்த வழியே இருசக்கர  வாகனத்தில் வேகமாக வந்த நபரை  பாதுகாப்பு நலன் கருதி காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். 

தமிழ்நாடு முதலமைச்சர் திருச்சியில் இருந்து  தஞ்சை நோக்கி வரும்போது தஞ்சை பழைய வீட்டு வசதி வாரியம் அருகே முதலமைச்சர் வாகனம் வருவதற்கு முன்பு சில நிமிடங்களில் சாலையில் இருசக்கர வாகனத்தில் ஒரு நபர் வேகமாக வந்து கொண்டிருந்தார்.

அப்போது, பாதுகாப்பு கருதி அங்கு பணியில் ஈடுபட்டிருந்த  காவலர்கள் அந்த நபரை  தடுத்து நிறுத்தினர். இதனால்,  பதட்டத்தில் அந்த நபர் வேகமாக சென்று கீழே விழுந்த காயம் அடைந்தார்.  


உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பி வைத்தனர். முதலமைச்சரின் வருகை சமயத்தில் இவ்வாறு பதட்டமான சூழலில் நிகழ்ந்த அச்சம்பவம்  அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதையும் படிக்க   | "ஸ்டெர்லைட் உரிமையாளரை தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்க கூடாது. மீறி அனுமதித்தால்..." திருமுருகன் காந்தி ஆவேசம்