தஞ்சை: வெள்ள எச்சரிக்கை இல்லை என்றாலும் பொதுமக்கள் உஷாராக இருக்கவும் - ஆட்சியர்

தஞ்சை: வெள்ள எச்சரிக்கை இல்லை என்றாலும் பொதுமக்கள் உஷாராக இருக்கவும் - ஆட்சியர்

தஞ்சை மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்றாலும் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட உள்ளதால்  தண்டோரா மூலம் எச்சரிக்கை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக கூறினார்.

சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் ஆற்றில் இறங்கவோ குளிக்கவோ கூடாது என்றும் செல்ஃபி எடுக்கக் கூடாது என்றும்  கேட்டுக் கொண்டார்.

தஞ்சை மாவட்டத்தை பொறுத்தவரை வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்றும் பொதுமக்கள் கவனமாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.