மாணவிகளுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த ஆசிரியர் கைது...!!

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அரசுப் பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாணவிகளுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த ஆசிரியர் கைது...!!

திண்டுக்கல் மாவட்டம்,  பழனி அடுத்துள்ள கே.வேலூர் அரசு நடுநிலைப் பள்ளியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வரும் சையது அகமது என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக பள்ளி நிர்வாகம் விசாரித்து ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்த நிலையில், பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.