தமிழ்நாட்டில் 66 சதவீத பேருக்கு கொரோனோவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளது...

தமிழகத்தில் 66 விழுக்காட்டினரின் உடலில் கொரோனோவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் 66 சதவீத பேருக்கு கொரோனோவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளது...

தமிழகத்தில் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி எத்தனை பேருக்கு உருவாகியுள்ளது என்பது தொடர்பாக 888 இடங்களில் 26 ஆயிரத்து 610 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. தற்போது இந்த ஆய்வின் முடிவில் 17 ஆயிரத்து 624 பேர்.. அதாவது 66. 2 சதவீதம் பேரின் உடலில் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. 

அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டத்தில் 84 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளது, அதேபோல குறைந்தபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 37 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருப்பதாக ஆய்வின் முடிவில் கூறப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டத்திற்கு அடுத்தபடியாக சென்னையில் 82 பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.