தமிழர் திருநாளாம் தை திருநாள் உற்சாக கொண்டாட்டம்..!

தமிழர் திருநாளாம் தை திருநாள் உற்சாக கொண்டாட்டம்..!

தமிழர் திருநாளாம் தை திருநாள், தமிழ்நாடு முழுவதும் இன்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழர்களின் பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில், தமிழ்நாடு முழுவதும் இன்று பொங்கல் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, வீடுகளில் வண்ண வண்ண தோரணங்கள் கட்டி, புதுப்பானையில் புத்தரிசிப் பொங்கலிட்டு, பொங்கலோ பொங்கல் என மகிழ்ச்சி பொங்க மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

பின்னர், கடவுளுக்கு படைத்த பொங்கலை அருகில் இருந்தவர்களுக்கு பரிமாறி மகிழ்ந்தனர். தமிழ்நாடு மட்டுமின்றி தமிழ்மக்கள் வசித்துவரும் உலகின் அனைத்து பகுதிகளிலும் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.