கொளுத்தும் வெயிலிலும் ஐசிடிஎஸ் ஊழியர்கள் போராட்டம்...!காரணம் இதோ..!

கொளுத்தும் வெயிலிலும் ஐசிடிஎஸ் ஊழியர்கள் போராட்டம்...!காரணம் இதோ..!

சென்னை தரமணியில் உள்ள இயக்குநர் மற்றும் குழும இயக்குநர் அலுவலகம் முன்பு கொளுத்தும் வெயிலில் அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு ஐசிடிஎஸ் ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் தரமணியில் உள்ள இயக்குநர் மற்றும் குழும இயக்குநர் அலுவலகம் வாயிலில் சாலையோரம் கொளுத்தும் வெயிலில் 250க்கும் மேற்பட்டோர் சட்டசபை மானிய கோரிக்கையின் போது 11 அம்ச கோரிக்கையை அறிவிக்க வலியுறுத்தி பெருந்திரள் முறையீடு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதையும் படிக்க : ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை...ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பு!

அங்கன்வாடி ஊழியர்களுக்கு வருவாய் கிராம உதவியாளர்களுக்கு இணையான அடிப்படை ஊதியமான 11 ஆயிரத்து 100 ரூபாய் வழங்க வேண்டும் எனவும்,  மாதாந்திர ஒய்வூதியமான 6 ஆயிரத்து 750 ரூபாய் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு ஐசிடிஎஸ் ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கையில் குடையுடனும், துணியுடனும் போராட்டத்தை முன்னெடுத்து வருவதால் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.