வரும் 3-ம் தேதி டெல்லி செல்கிறார் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்

தமிழகத்துக்கு கூடுதல் தடுப்பூசிகளை ஒதுக்க வலியுறுத்தி வரும் 3ம் தேதி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியாவை சந்திக்க உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

வரும் 3-ம் தேதி டெல்லி  செல்கிறார் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தபட்டுள்ள நிலையில், தடுப்பூசிகளின் தேவை அதிகரித்துள்ளது. இந்நிலையில்  வரும் 3-ம் தேதி டெல்லி சென்று தமிழகத்துக்கு கூடுதல் தடுப்பூசிகளை ஒதுக்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியாவிடம் நேரில் வலியுறுத்த உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரிகளில் நடப்பாண்டு முதலே மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கவும் வலியுறுத்த உள்ளதாக கூறியுள்ளார் . புதிய அரசு பதவியேற்ற பின் ஏற்கனவே டெல்லி சென்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்த மா. சுப்ரமணியன் தற்போது இரண்டாவது முறையாக டெல்லி பயணிக்கிறார் என்பது  குறிப்பிடத்தக்கது.