பால்வளத்துறை அமைச்சர் நாசருக்கு கொரோனா தொற்று உறுதி!!

தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பால்வளத்துறை  அமைச்சர் நாசருக்கு கொரோனா தொற்று உறுதி!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றின் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனை எதிர்கொள்ள அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாஸ்க் அணிவது, சமூக இடைவெளி கடைபிடிப்பது என பல வழிகாட்டு நெறிமுறைகளை அரசு கடைபிடிக்குமாறு வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.