கையும் களவுமாக பிடிபட்ட தாசில்தார்...! லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் நடவடிக்கை.. !

மதுரை, மேலூரில் லஞ்சம் வாங்கிய தாசில்தார், இடைத் தரகர் கைது...!

கையும் களவுமாக பிடிபட்ட தாசில்தார்...! லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் நடவடிக்கை.. !

மதுரை மாவட்டம் மேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், தலைமையிட துணை தாசில்தாராக மணிகண்டன் என்பவர் பணியாற்றி வருகிறார், இந்த நிலையில் இவர் 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கு மதிப்பீடு வழங்குவதற்காக ரூபாய் 20 ஆயிரம் லஞ்சம் கேட்பதாக, மேலூர் கருத்தப்புலியன்பட்டியை சேர்ந்த பிரபு என்பவர் மதுரை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார். 

அதனைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறையினரின் ஆலோசனைப்படி, 20 ஆயிரம் ரூபாய் ரசாயனம் தடவிய நோட்டை மணிகண்டனிடம், பிரபு வழங்கியுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி சத்தியசீலன் தலைமையிலான போலீசார், வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து மணிகண்டனை கையும் களவுமாக பிடித்தனர். தொடர்ந்து விசாரணைக்கு பிறகு அவரை கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக அவருக்கு உடந்தையாக இருந்ததாக இடைத் தரகர் மூக்கன் என்பவரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.