கி.வீரமணிக்கு தகைசால் தமிழர் விருது அறிவிப்பு!

கி.வீரமணிக்கு தகைசால் தமிழர் விருது அறிவிப்பு!

திராவிட கழக தலைவர் கி.வீரமணிக்கு இந்த ஆண்டு தகைசால் தமிழர் விருது வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

"தமிழ்நாட்டுக்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் "தகைசால் தமிழர்" என்ற பெயரில் புதிய விருது 2021-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விருதாளரை தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் கலந்தாலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

இதையும் படிக்க : நீண்ட நேரம் காத்திருந்தும் தக்காளி கிடைக்கவில்லை...ஏமாற்றமடைந்த பொதுமக்கள்...!

அக்கூட்டத்தில், இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, 'சமூகப் பாகுபாட்டுக்கு ஆளான மக்களுக்கு' ஆதரவாக தந்தை பெரியார் நடத்திய சமூகப் பிரச்சாரங்கள் மற்றும் போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டு நாற்பது முறை சிறைவாசம் அனுபவித்தவரும், 1962-இல் விடுதலை நாளிதழ் ஆசிரியராக பொறுப்பேற்று, தொடர்ந்து 60 ஆண்டுகளையும் கடந்து மிகச் சிறப்பாக பணி செய்து வருபவரும், உண்மை, பெரியார் பிஞ்சு, The Modern Rationalist - (ஆங்கிலம்) இதழ்களுக்கு ஆசிரியரும், திராவிடர் கழகத் தலைவருமான கி.வீரமணிக்கு 2023-ம் ஆண்டுக்கான "தகைசால் தமிழர் விருது" வழங்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது

அதன்படி, இந்தாண்டு தகைசால் தமிழர் விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கி. வீரமணிக்கு 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையும், பாராட்டு சான்றிதழும் வருகிற 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.