செல்வப்பெருந்தகை மீது புகார் அளிக்க தமிழ்நாடு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கார்கேவுடன் சந்திப்பு!!

செல்வப்பெருந்தகை மீது புகார் அளிக்க தமிழ்நாடு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கார்கேவுடன் சந்திப்பு!!

தமிழக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி உள்ளிட்டோர் இன்று பெங்களூருவில் மல்லிகார்ஜுன் கார்கேவை சந்திக்க உள்ளனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் அக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இன்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவை பெங்களூருவில் சந்திக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

2019ம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே எஸ் அழகிரி பொறுப்பேற்றுக் கொண்டார். பொதுவாக, தலைவர் பொறுப்பில் 3 ஆண்டு காலங்களே பதவியில் இருப்பது வழக்கம். அந்த வகையில், கே எஸ் அழகிரி பொறுப்பேற்று 3 ஆண்டுகள் முடிந்த நிலையில், அடுத்த தலைவர் யார் என்பதில் போட்டி நிலவி வருகிறது. 

இதையடுத்து, விரைவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாற்றம் செய்யப்படவுள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது. 

இந்நிலையில், செல்வப் பெருந்தகை மீது சில சட்டமன்ற உறுப்பினர்கள் புகார் அளிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதையும் படிக்க || "வருமான வரி திரும்பப்பெறுதல்" என்ற பெயரில் ஒரு புதிய இணைய மோசடி!!