சென்னையிலுள்ள இலங்கை தூதரகத்தை இன்று முற்றுகையிடவுள்ள மீனவர்கள்!

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை இன்று முற்றுகையிடவுள்ளனா்.

கடந்த அக்டோபர் 14 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 27 மீனவர்களையும் 5 படகுகளையும்  எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்தனர்.

இந்நிலையில், அவா்களை விடுவிக்கக்கோாி, ராமேஸ்வரம் மீனவா்கள் சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனா். ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக ராமேஸ்வரத்தில் இருந்து இரண்டு பேருந்துகளில் மீனவர்கள் சென்னைக்கு புறப்பட்டனா்.