தி.நகர் ஆகாய பாலம் நாளை திறப்பு - அமைச்சர் ஆய்வு!

தி.நகர் ஆகாய பாலம் நாளை திறப்பு - அமைச்சர் ஆய்வு!

சென்னை தியாகராய நகரில் அமைக்கப்பட்டுள்ள ஆகாய பாலத்தை அமைச்சர் கே.என். நேரு மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தனர்.

சென்னையின் மிகப் பெரிய வர்த்தகப் பகுதியாக விளங்கி வருவது சென்னை தியாகராய நகர். இங்கு கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில், 30 கோடி ரூபாய் செலவில் ஆகாய நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. சஸ்பெண்ட்...தமிழக அரசு அதிரடி நடவடிக்கை...!

தி.நகர் பேருந்து நிலையத்தில் இருந்து, மாம்பலம் ரயில் நிலையத்தை இணைக்கும் இப்பாலம் கட்டுமானப் பணிகள் முழுமையடைந்துள்ள நிலையில், நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்க உள்ளார்.