பொங்கலுக்கு அரசு தரும் கரும்பு.. விவசாயிகளிடமே நேரடி டீலிங்..!

பொங்கலுக்கு அரசு தரும் கரும்பு.. விவசாயிகளிடமே நேரடி டீலிங்..!

2 கோடி பயனாளர்கள்

பொங்கல் பண்டிகை வரும் 15-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புவதற்கான டோக்கன் வழங்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. பரிசு தொகுப்பிற்காக 2 ஆயிரத்து 430 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மொத்தம் 2 கோடி பேருக்கும் மேலான குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுகிறது.

வீட்டிற்கே வரும் டோக்கன்

இந்நிலையில் பொங்கல் தொகுப்பை வாங்க ஒரே நேரத்தில் குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன்கடைகளில் குவிவதைத் தடுக்க வீடு வீடாகச் சென்று டோக்கன் வழங்க திட்டமிடப்பட்டது.அதனை தொடர்ந்து  நியாய விலைக்கடை ஊழியர்கள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. சென்னை திருவல்லிக்கேணியில் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று ஊழியர்கள் டோக்கன்களை வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதேபோல் மதுரை மாவட்டத்தில் உள்ள 1550 நியாய விலை கடைகளுக்கு உட்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுக்கான டோக்கனை ஊழியர்கள் வழங்கினர். மேலும் நாளொன்றுக்கு 350 பேர் வீதம் பொங்கல் தொகுப்பூதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | மூன்று நாளில் கரை திரும்ப வேண்டியது.. 75 நாட்களாகியும் தகவல் இல்லை..!

அமைச்சர் ஆய்வு

அதனை தொடர்ந்து சென்னை, கோபாலபுரத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக சேமிப்பு கிடங்கில் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் விநியோகம் மற்றும் தரம் குறித்து உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், பொங்கல் தொகுப்பிற்கான கரும்புகளை கொள்முதல் செய்ய 17  மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.