சென்னையில் இடியுடன் திடீர் மழை..வாகன ஓட்டிகள் அவதி...!

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பெய்த மழையால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.

சென்னையில் இடியுடன் திடீர் மழை..வாகன ஓட்டிகள் அவதி...!

வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாக ஓய்ந்திருந்த நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இன்று மதியம் திடீரென பலத்த மழை பெய்தது.  குறிப்பாக புறநகர் பகுதிகளான செங்குன்றம், புழல், மாதவரம், கொளத்தூர், வில்லிவாக்கம், ஆகிய சுற்றுவட்டாரப் பகுதிகளில்  இன்று காலை முதல் மேகமூட்டமாக காணப்பட்டது.

அதன்பின் மதியம் லேசான தூறலில் ஆரம்பித்த மழை, மிதமான மழையாக பெய்யத் தொடங்கி பின்னர் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழையாக பெய்து வருகிறது. இந்த திடீர் மழை  காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதியுற்றனர்.   தெருக்கள், சாலைகள் மழைநீர் சூழ்ந்தது .

கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த தொடர் மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி நின்று பொதுமக்களுக்கு இடைஞ்சல் ஆகி பலர் வீடுகளை விட்டு வெளியில் தஞ்சமடைந்தனர் தண்ணீர் வடிந்த  பின்னர் தங்கள் வீடுகளுக்கு திரும்பி சென்றனர். என்பது குறிப்பிடதக்கது.