பழைய இரும்பு குடோனில் திடீரென தீ விபத்து.. பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்!!

நெல்லையில் பழைய இரும்பு குடோனில்  ஏற்பட்ட திடீர் தீ விபத்தால்  பல லட்சம் மதிப்பிலான பொருட்கள்  எரிந்து சேதமடைந்தன.

பழைய இரும்பு குடோனில் திடீரென தீ விபத்து.. பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்!!

நெல்லை மாவட்டம் பேட்டை செக்கடி அருகே பழைய இரும்பு வியாபாரம் செய்யும் குடோன் ஒன்று உள்ளது. இந்த குடோனில் எதிர்பாரத விதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தீயானது சிறிது நேரத்தில் மளமளவென அருகிலுள்ள இரண்டு கடைகளுக்கும் பரவியது. கொழுந்து விட்டு எரிந்த இந்த தீயினால் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன. இதுகுறித்த தகவலின் பேரில் அங்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக போராடினர்.

தீ விபத்து காரணமாக அப்பகுதியே  புகை மண்டலமாக காட்சியளித்ததால் வாகன ஓட்டிகளும் பொது மக்களும் மிகுந்த அவதிக்கு ஆளாகியுள்ளனர். இது  குறித்து வழக்குப்பதிவு செய்த பேட்டை போலீசார் தீவிபத்திற்கான காரணம் பற்றி  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.