ஏபிஜே அப்துல் கலாம் நினைவு தினத்தில் மரக்கன்றுகள் நட்ட மாணவர்கள்...!

மரக்காணம் பகுதியில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர். ஏ.பி.ஜே அப்துல்கலாம் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன.

ஏபிஜே அப்துல் கலாம் நினைவு தினத்தில் மரக்கன்றுகள் நட்ட மாணவர்கள்...!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் அப்துல்கலாம் அறக்கட்டளை சார்பில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு மரக்காணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

மேலும் பள்ளி மாணவர்கள் ஒருங்கிணைந்து அப்துல்கலாம் அவர்களின் கனவான, மரம் நடுவது குறித்து மரக்காணம் முக்கிய வீதிகள் வழியே பள்ளி மாணவர்கள் 'மரம் நடுவோம், மழை பெறுவோம்' என்று விழிப்புணர்வு பேரணி மேற்கொண்டனர்.

பின்னர் பள்ளி வளாகத்தில் டாக்டர் அப்துல்கலாம் அவர்களைப் பற்றி பேச்சுப் போட்டி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய மாணவர்களுக்கு சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட்டன. மேலும் இந்நிகழ்ச்சியில் மரக்காணம் காவலர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஏ.பி.ஜே அப்துல்கலாம் அறக்கட்டளை நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.