”விளையாட்டில் சிறந்து விளங்கி இந்தியாவுக்கு பெருமை சேருங்கள்" மாணவர்களுக்கு அமைச்சர் அறிவுரை!

”விளையாட்டில் சிறந்து விளங்கி இந்தியாவுக்கு பெருமை சேருங்கள்" மாணவர்களுக்கு அமைச்சர் அறிவுரை!

மாணவர்கள் ஏதாவது ஒரு விளையாட்டில் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தேசிய விளையாட்டு தினத்தையொட்டி திருச்சியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு மனித சங்கிலியில் ஈடுபட்டனர். 

இதையும் படிக்க : ஓணம் ஸ்பெஷல்: வண்டலூர் பூங்கா இன்று வழக்கம்போல் செயல்படும்...!

முன்னதாக விழாவினை தொடங்கி வைத்துப் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், வேற்றுமையில் ஒற்றுமையை கடைப்பிடிக்கும் வகையில் தமிழ்நாடு மாணவர்கள் மட்டுமல்லாது மணிப்பூர் மாநில விளையாட்டு வீரர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுவதாக பெருமிதம் தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், மாணவர்கள் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு விளையாட்டில் சிறப்பாக செயல்பட்டு, இந்தியாவிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று அன்பில் மகேஷ் தெரிவித்தார்.