பட்டா வழங்கும் வரை போராட்டம்...! வட்டாட்சியர் அலுவலகம் முன்பு  காத்திருக்கும் மக்கள்...! 

பட்டா வழங்கும் வரை போராட்டம்...! வட்டாட்சியர் அலுவலகம் முன்பு  காத்திருக்கும் மக்கள்...! 


ஈரோட்டில், அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பட்டா கேட்டு போராடிவரும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக காத்திருக்கும் போராட்டம் நடந்து வருகிறது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சிக்குட்பட்ட, மந்தை மாரியம்மன் கோவில் வீதியில் சுமார்  32 ஏழை துப்பரவு மற்றும் தலித் இஸ்லாமிய ஏழைத் தொழிலாளர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில்,   கடந்த 25 ஆண்டுகளாக இவர்களுக்கான பட்டா கேட்டு போராடி வருகின்றனர்.

எனினும், அவர்களுக்கு பட்டா  வழங்காமல் வருவாய் துறையினர் இழுத்தடித்து வருவதாகக் குற்றம்சாட்டி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மேலும், பட்டா வழங்கக்கோரி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும் இதுவரையிலும் பட்டா வழங்காததன் காரணமாக, இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அங்கு வசிக்கும் சுமார் 30க்கும் மேற்பட்த மக்களுடன் பட்டா வழங்கும் வரை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு  காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிக்க   } 15 நாட்களாக தண்ணீர் வரவில்லை....! புதுக்கோட்டையில் கிராம மக்கள் சாலை மறியல்...!