பத்திரப்பதிவுக்கு கூடுதல் தொகை வாங்கினால் கடும் நடவடிக்கை

தமிழகத்தில், அனைத்து பத்திரப்பதிவுகளிலும் அரசு நிர்ணயித்த தொகையை விட கூடுதல் தொகையை வாங்கினால், நடவடிக்கை எடுக்கப்படும் என வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். 

பத்திரப்பதிவுக்கு கூடுதல் தொகை வாங்கினால் கடும் நடவடிக்கை

தமிழகத்தில், அனைத்து பத்திரப்பதிவுகளிலும் அரசு நிர்ணயித்த தொகையை விட கூடுதல் தொகையை வாங்கினால், நடவடிக்கை எடுக்கப்படும் என வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். 

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் அமைச்சர் மூர்த்தி திடீர் ஆய்வு மேற்கொண்டார். 

பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், 

ஊரடங்கு காலத்திற்கு பிறகு பத்திரப்பதிவு எவ்வித இடையூறுமின்றி நடைபெற்று வருவதாகவும், கடந்த காலத்தை காட்டிலும் தற்போது பத்திரப்பதிவு அதிகமாக நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.  

மேலும், அனைத்து பத்திரப்பதிவுகளிலும் அரசு நிர்ணயித்த தொகையை விட பத்திரப்பதிவுக்கு கூடுதல் தொகையை வாங்க கூடாது என சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தார்.