நடிகர் ரஜினிகாந்த் நலம் பெற வேண்டி சிறப்பு வழிபாடு.....108 தேங்காய் உடைத்து, மண்சோறு சாப்பிட்ட ரசிகர்கள்

உடல்நலகுறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்த் நலம் பெற வேண்டி அவருடைய ரசிகர்கள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

நடிகர் ரஜினிகாந்த் நலம் பெற வேண்டி சிறப்பு வழிபாடு.....108 தேங்காய் உடைத்து, மண்சோறு சாப்பிட்ட  ரசிகர்கள்

தமிழக சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் சில நாட்களுக்கு முன் நடைபெற்ற திரைப்பட கலைஞர்களுக்காக இந்திய அரசின் சார்பில் வழங்கப்படும் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை பெறுவதற்கு டெல்லி சென்று, விருது பெற்ற பின் தமிழகம் வந்தார். அதன்பின் வீட்டில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த அவர் தீடிர் உடல்நல குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் இன்று மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ரஜினிகாந்த் உடல் நலம் தேறி பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டி அவரது ரசிகர்கள் 108 தேங்காய் உடைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.

அதேபோல் திருப்பரங்குன்றம் வெயில் உகந்த அம்மன் திருக்கோவிலில் சிறப்பு பிரார்த்தனை நடத்தி மண்சோறு சாப்பிட்டனர் என்பது குறிப்பிடதக்கது.