விரைவில் மோடியின் ஆட்சி தூக்கி எறியப்பட்டு காங்கிரஸ் ஆட்சி அமையும்- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்....!!

விரைவில் மோடியின் ஆட்சி தூக்கி எறியப்பட்டு காங்கிரஸ் ஆட்சி அமையும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈ வி கே எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

விரைவில் மோடியின் ஆட்சி தூக்கி எறியப்பட்டு காங்கிரஸ் ஆட்சி அமையும்- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்....!!

தென்சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் வீதிதோறும் காங்கிரஸ் வீடுதோறும் காங்கிரஸ் என்ற கோஷத்தோடு உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி சென்னை அசோக் நகர் 3-வது அவென்யு பகுதியில் இன்று   நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் திரு  K V தங்கபாலு, திரு E V K S இளங்கோவன். சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வம் பெருந்தகை ஆகியோர்  உறுப்பினர் சேர்க்கையை துவக்கி வைத்தனர்.

பின்னர் விழா மேடையில் பேசிய  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈ வி கே எஸ் இளங்கோவன், கூறுகையில்,

மக்களை ஏமாற்றுவதில் மிக சிறந்த திறமைசாலி பிரதமர் மோடி என்றும் மக்களின் பிரச்சனையில் கவனம் செலுத்தாமல் கோவில்களுக்கு சென்று குளத்தில் மூழ்கி எழுந்து கொண்டு இருக்கின்றார் என்றார்.

எதையும் எதிர்பார்க்காமல் நாட்டு மக்களுக்காக தியாகம் செய்தவர்கள் தான் காங்கிரஸ் தலைவர்கள் என்று கூறிய அவர், வங்காளதேசம் நாட்டை உருவாக்கியவர் அன்னை இந்திராகாந்திதான் வங்காளதேசத்தின் 50 வது ஆண்டு பொன்விழாவில் பிரதமர் மோடி அன்னை இந்திராகாந்தியை பற்றி பேசாமல் தனது பெருமைகளை பேசி வருகின்றார் என குற்றம் சாட்டினார். 

தண்ணீர் இல்லாத இடத்தில் எப்படி படகை ஓட்டி காட்டியிருக்கின்றார் அண்ணாமலை, கொலம்பஸிற்கு பிறகு ஒரு புத்திசாலி யார் என்றால் அது அண்ணாமலை தான் என்றும் அவர் இங்கு இருக்கவேண்டிய ஆள் இல்லை அவர் இருக்க வேண்டியது அமெரிக்கா என கூறினார்.

அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர்,  அண்ணாமலை சொல்வதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். அவர் அரசியல் அனுபவம் இல்லாத சிறிய பையன். அவர்மீது நிறைய சுமைகள் இருக்கிறது என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், மோடியை பொறுத்தவரை இந்த நாட்டின் பிரதமராக இருக்க அவருக்கு தகுதி கிடையாது. விவசாயிகள் எத்தனை நாள் போராடினார்கள் என்று தெரியாமல் இருக்கும் பாஜக எப்படி இந்தியாவை காப்பாற்ற போகிறது. கூடிய விரைவில் மோடியின் ஆட்சி தூக்கி எறியப்பட்டு காங்கிரஸ் ஆட்சி அமையும் என்றார்.