குடிபோதையில் காவல் நிலையத்திற்குள் புகுந்து ஆய்வாளரை தரக்குறைவாக பேசி ரகளையில் ஈடுபட்ட வழக்கறிஞர் ...

சீர்காழி காவல் நிலையத்திற்குள் புகுந்து குடிபோதையில் ஆய்வாளரை தரக்குறைவாக பேசி ரகளையில் ஈடுபட்ட வழக்கறிஞர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

குடிபோதையில் காவல் நிலையத்திற்குள் புகுந்து ஆய்வாளரை தரக்குறைவாக பேசி ரகளையில் ஈடுபட்ட வழக்கறிஞர் ...

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சேர்ந்தவர் வழக்கறிஞர் ராஜேஷ். இவர் பார் கவுன்சில் செயலாளராகவும் இருந்து வருகிறார். இவர் சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே குடிபோதையில் காரை ஓட்டி சென்று, தனியார் பேருந்து மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் அடிப்படையில், அவரை சீர்காழி காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர்.

அப்போது, குடிபோதையில் இருந்த அவர்,  காவல் ஆய்வாளரை தகாத வார்த்தைகளால் திட்டி ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து ரகளையில் ஈடுபட்ட வழக்கறிஞர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.