எங்களின் ஒற்றை தலைமையே, பொதுச் செயலாளரே வருக...வருக... இ.பி.எஸ்.க்கு ஆதரவாக பேனர்!

எங்களின் ஒற்றை தலைமையே, பொதுச் செயலாளரே  வருக...வருக... இ.பி.எஸ்.க்கு ஆதரவாக பேனர்!

திருவண்ணாமலைக்கு வருகை தந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, எங்களின் ஒற்றை தலைமையே, பொதுச்செயலாளரே என பேனர் வைத்த சம்பவம் அதிமுகவினாிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை  மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி வருகை புரிந்துள்ளார்.

இந்தநிலையில், அவரை வரவேற்கும் விதமாக அதிமுக தொண்டர்கள் சார்பில் நகர் முழுவதிலும் எங்களின் ஒற்றை தலைமையே, பொதுச் செயலாளரே என பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த பேனர்களில் அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் புகைப்படம் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.