அட்ரஸ் கேட்பது போல் சிறுமியிடம் சில்மிஷம்.... மடக்கி பிடித்த பொதுமக்கள்

சென்னையில் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். 

அட்ரஸ் கேட்பது போல் சிறுமியிடம் சில்மிஷம்.... மடக்கி பிடித்த பொதுமக்கள்

சென்னையில் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். 

திருமங்கலம் பகுதியை சேர்ந்த சிறுமி நேற்று வீட்டின் அருகில் உள்ள கடைக்கு சென்று விட்டு திரும்பும் போது வாலிபர் ஒருவர் அந்த சிறுமியிடம் அட்ரஸ் கேட்பது போல் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். 

அப்போது சிறுமி சத்தம் போடவே அப்பகுதி மக்கள் ஓடி வந்துள்ளனர். உடனடியாக அந்த நபர் தனது இருசக்கர வாகனத்தை எடுத்து தப்பிச் சென்றுள்ளார்.  

பின்னர் மீண்டும் அங்கு வந்த அதே இளைஞரை பிடித்த பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டது முகப்பேரை சேர்ந்த சரவணன் என்பது தெரியவந்த நிலையில் அவரை போக்சோவில் கைது செய்தனர்.